பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் -முதல்வர் அறிவிப்பு..!

Published by
murugan

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியீட்டு இருந்தது.

மேலும், இந்த பொங்கல் பரிசு தொகுப்பு 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் பட்சத்தில் ரூ.238,92, கோடி செலவினம் ஏற்படும் என  அரசாணையில் விவரமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில்,  பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் எனவும் ரூ.1000 நியாய விலை கடைகளில் பொங்கலுக்கு முன்னதாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்புடன் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை அட்டைதாரர்கள்,  பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.  மேலும் பொங்கலுக்கு முன்னதாக அதாவது ஜனவரி 10-ம் தேதிக்குள் மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழக்கமாக 15ஆம் தேதி அனுப்பப்படும் மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் பொங்கலை முன்னிட்டு 10-ம் தேதி அன்று வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை எனக்கூறி பொங்கல் பரிசு தொகை 3,000 வழங்கவேண்டும் 1,000 வழங்கவேண்டும் என பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000 வழங்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

இதேபோல ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

5 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

6 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

7 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

7 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

7 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

9 hours ago