மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் போர்க்கால அடிப்படையில் அமைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் கடந்த பத்து மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ 2,200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளுக்கு செலுத்தக்கூடிய வட்டி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 6 மாதங்களில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் போர்க்கால அடிப்படையில் அமைந்துள்ளது. மேலும் கடந்த ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழல் தொடர்பாக முழு அறிக்கை ஒரு வார காலத்திற்குள் கிடைக்கப் பெறும் என்றும் தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்கள் மக்களுக்கான திட்டங்களாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…