கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு 21 நாள்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து அமைச்சர் தங்கமணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஏப்ரல் 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் மின்சார கட்டணம் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் கட்ட முடியவில்லை என்றாலும் ஏப்ரல் 14-ம் தேதி வரை மின்துண்டிப்பு இருக்காது என அமைச்சர் தங்கமணி கூறினார்.
சமீபத்தில் திருவண்ணாமலையில் தெரியாமல் மின்துண்டிப்பு நடந்துவிட்டது உடனடியாக எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் அங்கு பேசி அங்கு மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் மின்துண்டிப்பு இருக்காது என கூறியுள்ளோம்.
மேலும் மத்தியில் இருந்து வரும் மின்சாரம் வந்துகொண்டு இருக்கிறது. தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் 4 ஆயிரம் மெகாவாட் மின் தேவை குறைந்துள்ளது.
தொழிற்சாலைகள் கடந்த 4 நாள்களாக இயங்கததால் மின்சாரத்துறைக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தமாதம் இழப்பு அதிகமாக இருக்கும் காரணம் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கததால் வருமானம் குறையும் என கூறினார்.
மின்சாரம் தேவை குறைந்ததால் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் 80% மின்சார பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மின்தடை ஏற்பட்டால் அதை சரிசெய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.இதனால் ஏப்ரல் 14-ம் தேதி வரை தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…