4 நாள்களாக ரூ.300 கோடி இழப்பு .! அடுத்தமாதம் இழப்பு அதிகமாக இருக்கும்-அமைச்சர் தங்கமணி.!

Published by
murugan

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு 21 நாள்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து அமைச்சர் தங்கமணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது ஏப்ரல் 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் மின்சார கட்டணம் செலுத்தலாம். ஆன்லைன் மூலம்  கட்ட முடியவில்லை என்றாலும்  ஏப்ரல் 14-ம் தேதி வரை மின்துண்டிப்பு இருக்காது என அமைச்சர் தங்கமணி கூறினார்.

சமீபத்தில் திருவண்ணாமலையில் தெரியாமல் மின்துண்டிப்பு நடந்துவிட்டது உடனடியாக எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் அங்கு பேசி அங்கு மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் மின்துண்டிப்பு இருக்காது என கூறியுள்ளோம்.

மேலும் மத்தியில் இருந்து வரும் மின்சாரம் வந்துகொண்டு இருக்கிறது. தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் 4 ஆயிரம் மெகாவாட் மின் தேவை குறைந்துள்ளது.

தொழிற்சாலைகள் கடந்த 4 நாள்களாக இயங்கததால் மின்சாரத்துறைக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தமாதம் இழப்பு அதிகமாக இருக்கும் காரணம் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கததால் வருமானம் குறையும் என கூறினார்.

மின்சாரம் தேவை குறைந்ததால் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் 80% மின்சார பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மின்தடை ஏற்பட்டால் அதை சரிசெய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.இதனால் ஏப்ரல் 14-ம் தேதி வரை தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

 

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

7 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

7 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

10 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

10 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

11 hours ago