இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலவற்றை எடுத்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் மிக பெரிய இழப்பை சந்தித்துள்ளது. கொரோனவால் இதுவரை இந்தியாவில் 873 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மேலும் கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. மக்களை அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற யாரும் வீட்டை விட்டு வெளிய வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால், பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இதனால் கொரோனா தடுப்பு பணி மற்றும் பாதிப்பை ஈடுசெய்ய தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி தேவை என பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். சவாலான இந்த தருணத்தில் நாட்டின் நலன் கருதி தமிழகத்தின் கோரிக்கையை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே ரூ.4,000 கோடி நிதி வழங்குமாறு கோரியிருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…