அபராதமாக விதிக்கப்படும் ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து விஜய் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதிகள் ஹேமலா- துரைசாமி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சுப்ரமணியம் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த பிறப்பித்த உத்தரவுக்கு ஹேமலா- துரைசாமி அமர்வு இடைக்கால தடை விதித்தது
இந்நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் தொடர்ந்த வழக்கு இன்று தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ரூ 1 லட்சத்தை கொரோனா நிதிக்கு ஏன் கொடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார்.
அப்போது, கொரோனா நிவாரண நிதியாக அரசிடம் ரூ.25 லட்சம் ஏற்கனவே கொடுத்துள்ளதாகவும், சொகுசு கார் வழக்கில் அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சுப்ரமணியம் முன்பு விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…