தமிழகத்தில்,அரசு போக்குவரத்துக்கு கழகங்களின் அதிகாரிகள் தாங்கள் விரும்பிய போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம் என்ற அரசின் அறிவிப்பு, ஊழியர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும், மாநகர் போக்குவரத்து கழகம்,அரசு விரைவு போக்குவரத்து கழகம்,விழுப்புரம் போக்குவரத்து கழகம் போன்றவற்றில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.மாத கடைசி தேதியில் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவது வழக்கம்.
ஆனால்,கும்பகோணம்,மதுரை,சேலம்,நெல்லை மற்றும் கோவை போன்ற போக்குவரத்து கழகங்களின் ஊழியர்களுக்கு மாதத்தின் கடைசி தேதியில் அல்லது அடுத்த மாதத்தின் முதல் தேதியில் சம்பளம் வழங்கப்படும்.சம்பள தேதியானது விடுமுறை நாட்களில் வந்தால்,அதற்கு முந்தைய தேதியில் சம்பளம் வழங்கப்படும்.
இந்நிலையில்,அந்தந்த போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகள் தாங்கள் முடிவு செய்த நாட்களில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம் என்ற அரசின் அறிவிப்பு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள்,”சம்பள தேதியை மாற்றினால் எங்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும்.ஆகையால்,பழைய முறையிலே சம்பளம் போட வேண்டும்” என்று வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தினர்..
இதற்கு முன்னதாக சம்பள உயர்வு, தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கட்டமாக போராட்டங்களை தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் முன்னெடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…