அரசு நிர்வாகங்களில் சம்பள தேதி மாற்றம்..! ஊழியர்கள் கவலை..!

Published by
Edison

தமிழகத்தில்,அரசு போக்குவரத்துக்கு கழகங்களின் அதிகாரிகள் தாங்கள் விரும்பிய போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம் என்ற அரசின் அறிவிப்பு, ஊழியர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும், மாநகர் போக்குவரத்து கழகம்,அரசு விரைவு போக்குவரத்து கழகம்,விழுப்புரம் போக்குவரத்து கழகம் போன்றவற்றில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.மாத கடைசி தேதியில் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால்,கும்பகோணம்,மதுரை,சேலம்,நெல்லை மற்றும் கோவை போன்ற போக்குவரத்து கழகங்களின் ஊழியர்களுக்கு மாதத்தின் கடைசி தேதியில் அல்லது அடுத்த மாதத்தின் முதல் தேதியில் சம்பளம் வழங்கப்படும்.சம்பள தேதியானது விடுமுறை நாட்களில் வந்தால்,அதற்கு முந்தைய தேதியில் சம்பளம் வழங்கப்படும்.

இந்நிலையில்,அந்தந்த போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகள் தாங்கள் முடிவு செய்த நாட்களில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம் என்ற அரசின் அறிவிப்பு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள்,”சம்பள தேதியை மாற்றினால் எங்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும்.ஆகையால்,பழைய முறையிலே சம்பளம் போட வேண்டும்” என்று  வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தினர்..

இதற்கு முன்னதாக சம்பள உயர்வு, தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கட்டமாக போராட்டங்களை தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் முன்னெடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Edison

Recent Posts

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

12 minutes ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

47 minutes ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

49 minutes ago

போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…

56 minutes ago

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

2 hours ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

3 hours ago