மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கும் எல்லோரா ஃபேமிலி சலூன் கடை.
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மக்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில கடைகளில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மதுரையில் உள்ள எல்லோரா ஃபேமலி சலூன் கடையில், கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழுடன் வருபவர்களுக்கு, ஹேர்கட், பேசியல், வாக்சிங் மற்றும் அனைத்து பியூட்டி சர்வீஸ்களுக்கும் 50% ஆஃபர் வழங்கப்படுகிறது.
கடையின் உரிமையாளர் கார்த்திகேயன் இதுகுறித்து கூறுகையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 50 சதவீத தள்ளுபடி நாங்கள் வழங்குகிறோம். ஏனென்றால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் மூன்றாவது அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…