எடப்பாடி அருகே இரவு நேரத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை கிராமமக்கள் தடுத்து பிடித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வேப்பம் பட்டி கிராம பகுதியில் சுமார் 560 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதில் மணல் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஏரியில் இரவு நேரத்தில் மணல் திருட்டு நடந்துகொண்டு வருகிறது.
இதே போன்று நேற்றும் நள்ளிரவு நேரத்தில் இந்த ஏரியில் இருந்து மணல் எடுத்துள்ளனர். அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் கூட்டத்தால், வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.
இது குறித்து கூறிய கிராம மக்கள், பலமுறை மணல் திருட்டு நடப்பது குறித்து புகார் அளித்துள்ள நிலையில் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரைக்கொண்டு திருட்டு நடப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இந்த மணல் திருட்டை தடுத்து நிறுத்தி இயற்கை வளத்தை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…