வரும் 5-ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா..!

Published by
லீனா

வரும் 5-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கிறார் சசிகலா. 

வரும் 5-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  நினைவுதினத்தை முன்னிட்டு, சசிகலா அவர்கள் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இடத்திற்கு செல்கிறார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழக மக்களின் உரிமைக்காகவும், ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கவும் தம் வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர். உயிர் தொண்டர்களின் நலனில் அக்கறைக் கொண்டு தன்னலமின்றி பொதுநலத்தோடு மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்துக் காட்டிய ஒப்பற்ற மக்கள்தலைவி, நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடைபிடித்த அதே கொள்கையோடு, அவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து பயணிக்க, அவர்களது நினைவு நாளான 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணிக்கு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் கழகத் தொண்டர்களோடு சேர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருக்கிறார்கள்.

இந்த புனித நிகழ்வில், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவியின் பாசறையில் பயின்ற பாசமிகு தொண்டர்களும், கழகத்தின் அனைத்துப்பிரிவு நிர்வாகிகளும், புரட்சித்தலைவி அம்மா அவர்களை தங்கள் முன் மாதிரியாக மனதில் வைத்து, தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் சிங்கப்பெண்களும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும், ஜாதிமத பேதமின்றி, கட்சிப்பாகுபாடு இல்லாமல் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, ஓர் அணியில் நின்று, ஒற்றுமையாக இணைந்து, அனைவரும் முகக்கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

10 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago