சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாகவும், அனைத்து சிகிச்சைக்கும் போதிய ஒத்துழைப்பு வழங்குவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா, வரும் 27 ஆம் தேதி பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகவுள்ள நிலையில், அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலாவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, தற்போது உதவியுடன் எழுந்து நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாகவும், உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால், அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, சசிகலா உணவு உட்கொள்வதாகவும், அனைத்து சிகிச்சைக்கும் போதிய ஒத்துழைப்பு வழங்குவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…