Madurai High Court [Image source : The Hindu ]
நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விசாரணை தாமதமாகிறது என்று சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ தகவல்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 3 மாத அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதத்தில் சாத்தான்குளம் கொலை வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விசாரணை தாமதமாகிறது என்றும் மேலும் 8 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி இருப்பதால் 2-3 மாத அவகாசம் தேவைப்படுகிறது எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதால் அப்பணியிடம் காலியாக உள்ளது. நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய நீதிபதி நியமிக்கப்பட்டதால் வழக்கு விசாரணை தாமதமானது எனவும் சிபிஐ தரப்பில் கூறியுள்ளனர்.
மதுரை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடக்கோரி ஜெயராஜின் மனைவி தொடர்ந்து வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 முறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 5 மாத அவகாசம் கேட்டு சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…