எந்த பள்ளிகளில் சாதி, மத அடையாளங்கள் உள்ளது என கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக பள்ளி கல்வித் துறை அனுப்பிய சுற்றறிக்கையில்,பள்ளிகளில் மாணவர்கள் கையில் கயிறு கட்டுதல் மற்றும் நெற்றியில் திலகமிடுவதை தடுக்க வேண்டும் என்று அனைத்து தலைமைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் .ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்த அறிவிப்பை பள்ளி கல்வி துறை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் சுற்றறிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று கூறுகையில், .ஏற்கெனவே இருக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று தெரிவித்தார்.மேலும் இது தொடர்பான அறிக்கை தனது கவனத்திற்கும் வரவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பள்ளிகளில் சாதி, மத அடையாளங்கள் உள்ளது என கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று பள்ளிகளில் வழக்கமான நடைமுறைகளே தொடரும் எனக்கூறியிருந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் திடீரென மாற்றி கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…