MKStalinvisit [file image]
தேர்தலின் போது திமுக கொடுத்த மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தை நாளை செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்க முதல்வர் நாளை காஞ்சிபுரம் செல்கிறார். இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம் நகரில் உள்ள அரசு பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
முதல்வர் வருகையை கவனத்தில் கொண்டு காஞ்சிபுரம் நகரில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அனைத்து அரசு பள்ளிகள் செயல்படும் நேரமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பள்ளிகளின் நேரம் காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை காலை 9 மணி முதல் 4 மணி வரை செய்யப்பட்டு வந்த பள்ளிகள் நாளை 8 மணி முதல் 3 மணி வரை செயல்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நாளை முதல் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதலே சிலருக்கு மகளிர் உரிமை தொகை பணம் 1000 ரூபாய் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…
மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…