பள்ளிகள் திறப்பு : பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

Published by
Rebekal

பள்ளிகள் திறக்கப்படுவதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் எனவும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நாளை 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை சார்பில் நெறிமுறைகள் வெளியிட்டுள்ளோம். மேலும் பள்ளிகளில் எடுக்கவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்து பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், ஒருவேளை முகக்கவசம் கிழிந்து விட்டால் மாற்று முகக்கவசம் வழங்கும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் முகக்கவசம் வைத்திருப்பதற்கு அறிவுறுத்தி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளி வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு கட்டாயம் சுத்தப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகளில் முறையாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே நடைபெறும். மேலும் தற்போதைக்கு பள்ளிகளில் விளையாட்டு நேரம் கிடையாது.

தினமும் காலை 9.30 முதல் மாலை 3.30 மணி வரை பள்ளிகள் நடைபெறும். பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பயப்பட வேண்டாம். அனைவருமே பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பள்ளிக்கு வரக் கூடிய மாணவ மாணவிகள் பாதுகாப்பை உறுதிசெய்வது அரசின் கடமை என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Recent Posts

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

37 minutes ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

1 hour ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

2 hours ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

3 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

3 hours ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

4 hours ago