muthusamy [Imagesource : thehindu]
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் முத்துசாமி இன்று மாலை ஆலோசனையில் மேற்கொண்டார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் வசூல் பணத்தை வைக்க மேலும் 500 டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும். முதல் முறையாக மதுபான கடைக்கு வருபவர்களை கண்டறிந்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
டாஸ்மாக் கடைகளுக்கான வாடகை, மின் கட்டணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். டாஸ்மாக் கடைகளுக்கு தனி மீட்டர், அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் விற்பனை செய்வது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 மாநிலங்களில் இக்குழு நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…