மணல் மாட்டுவண்டி உரிமையாளர்களின் பிரச்சனையின் ஆழம் தெரியாமல் கமல்ஹாசன் பேசுவதாக திமுக வேட்பாளர் செந்தி பாலாஜி குற்றசாட்டியுள்ளார்.
சமீபத்தில் கரூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அத்தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வெற்றி பெற்று ஆட்சி வந்தவுடன் அடுத்த நொடியே மாட்டுவண்டி உரிமையாளர்கள் மணல் அள்ளலாம். அதை அதிகாரிகள் யாரும் தடுக்க மாட்டார்கள். அப்படி தடுக்கும் அதிகாரிகள், இங்கே பணியாற்றமாட்டார்கள் என்று அவர் கூறியது சர்ச்சையானது.
பின்னர் செந்தி பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செந்தி பாலாஜிக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்ட ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதில் கருத்து தெரிவித்த செந்தில் பாலாஜி, மணல் மாட்டுவண்டி உரிமையாளர்களின் பிரச்சனையின் ஆழம் தெரியாமல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசுகிறார். மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிட கூடிய வேட்பாளர் கரூர் தொகுதியில் மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ஆதரவா? எதிர்ப்பா என்று அவர் தெரியப்படுத்த வேண்டும். நாங்கள் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டோம் என்று அந்த வேட்பாளர் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…