கொரோனாவிலிருந்து குணமாகி சென்றவர்களை கண்காணிக்க தனி மையங்கள் உருவாக்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் மொத்தமாக 3,32,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1179 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,15,444 ஆக அதிகரித்துள்ளது.மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5641 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து நேற்று 5236 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,72,251 பேர் வீடு திரும்பியுள்ளனர் .
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவர்களை கண்காணிக்க தனியாக மையங்கள் உருவாக்கப்படும் என்று கூறினார். கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு சென்றவர்களுக்கு , உடல்நலக்குறைவுக்கு உள்ளானது தெரிய வந்தது .எனவே அவர்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதியதாக ஒரு மையம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…