உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 1,188 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று காவல்துறை தலைமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில், தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான “உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,594 மனுக்கள் காவல்துறையில் பெறப்பட்டன என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மனுக்களில் 244 மனுக்கள் நீதிமன்றம் மற்றும் வேறு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய காரணத்தினால், புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து மனுக்கள் மீது விசாரணை முடிக்கப்பட்டது. மீதம் உள்ள 1,350 மனுக்களில், நேற்று முன்தினம் வரை 938 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, தீர்வு காணப்பட்டுள்ளது.
தீர்வு காணப்பட்ட மனுக்களில், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு தொடர்பாக 291 மனுக்களும், சொத்து தகராறு தொடர்பாக 278 மனுக்களும், சட்ட விரோத நடவடிக்கை கட்டுப்படுத்த கோரி 70 மனுக்களும், காவல் நிலைய சேவைகள் வேண்டி 51 மனுக்களும், குடுமப தகராறு தொடர்பாக 58 மனுக்களும், இதர காரணங்களுக்காக 190 மனுக்களும் அடங்கும்.
நிலுவையில் உள்ள 412 மனுக்கள் மீது விசாரணை நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டு, இன்னும் சில நாட்களுக்குள் தீர்வு கண்டு முடித்து வைக்கப்படும் என்று காவல்துறை தலைமை தெரிவித்துள்ளது. தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மூலம் பெறப்பட்ட மனுக்களை 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…