தன் மீதான பாலியல் வழக்கு ஆந்திராவுக்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்குத் தடை விதிக்கவும் தனது மனுவில் ராஜேஷ் தாஸ் கோரிக்கை வைத்துள்ளார். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணையை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வழக்கு நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் நீதிமன்றத்தில் நாளை அரசு தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ள நிலையில் ராஜேஷ் தாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார். விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…