பாலியல் குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.
இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாக தான் உள்ளது. இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு, பள்ளிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம், 19 வயது பெண் ஒருவர், ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஒருவாரத்தில் திருப்பி தந்து விடுவதாக கூறிய நிலையில், பணத்தை திருப்பி தரமுடியவில்லை.
இதனையடுத்து, அந்த பெண்ணை அழைத்த சிவக்குமார், மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். மேலும், தனது நண்பர் ரவி என்பரையும் பாலியல் பலாத்காரம் செய்யச்சொல்லி, வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்த வழக்கில், ரவி இறந்து விட்டநிலையில், சிவக்குமாருக்கு 34 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 13 ஆயிரம் அபராதமும் விதித்து நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…