TN BJP VP [Image-TOI]
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து, ஏமாற்றியவருக்கு ஏன் இவ்வளவு ஆதரவு என தமிழக பாஜக துணைத்தலைவர் காட்டம் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையின் 18 மணிநேர சோதனை நடவடிக்கைக்கு பிறகு தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது நெஞ்சவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, செந்தில் பாலாஜியின் கைது குறித்து, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். சாதாரண மக்களிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி லஞ்சம் வாங்கி ஏமாற்றிய ஒருவருக்கு ஆதரவு அளித்து வருவது வெட்கமாக இல்லை என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழகமே தலைகுனிய வேண்டிய நிலையில் இருக்கிறது, தமிழக முதலமைச்சர் தனது கட்சியினரை சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வைக்கவேண்டும். மேலும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…