Sivasankar Baba - Chennai High court [File Image]
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி நிர்வாகியாக பொறுப்பில் இருந்த சிவசங்கர் பாபா மீது அங்கு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் இவர் மீது பாலியல் புகார் அளித்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த புகார்கள் பதியப்பட்டன.
இந்த புகாரின் பெயரில் சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது 8க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் என இவர்மீதான வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றன.
இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்குகள் மீது விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார். அதில், வெளிநாட்டில் இருந்து மின்னஞ்சல் மூலம் ஒரு மாணவி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நம்பகத்தன்மையில்லை என கூறி சிவசங்கர் பாபா தரப்பு வாதிட்டது.
அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, விசரணையை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. மேலும், அடுத்த நீதிமன்ற விசாரணைக்கு புகார் அளித்த மாணவியை காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வரும் செப்டம்பர் 15ஆம் தேத்திக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…