அதிர்ச்சி : இறந்தவருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தி..!

Published by
லீனா

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை  அடுத்த வில்வ மரத்துபட்டியை சேர்ந்த ராஜப்பா என்பவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை  அடுத்த வில்வ மரத்துபட்டியை சேர்ந்தவர் ராஜப்பா. இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த தேதி குறிப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி அவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு அடுத்த தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான தேதி வந்ததையடுத்து, சுகாதார ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை அழைத்த  நிலையில், அவரது குடும்பத்தினர் ராஜப்பா உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி ராஜப்பாவுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர் பேரிலோவன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து அவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குருஜிச்செய்தி வந்ததையடுத்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Recent Posts

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

53 minutes ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

1 hour ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

2 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

2 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

3 hours ago

INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

4 hours ago