நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்படும் – வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று வெறும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள நாளை மறுநாள் மட்டும் கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். மேலும் வணிகர்கள் தற்போதைய நிலையை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று விக்கிரமராஜா தெரிவித்தார். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக நேற்று இரவு வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது நாட்டின் நன்மைக்காக வரும் 22ஆம் தேதி ஊரடங்கை நாம் பின்பற்றுவோம் என்றும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவித்தார். இது 22 ம் தேதி கொரோனா வைரஸுக்கு எதிராக சோதனை ஓட்டமாக இருக்கும் என குறிப்பிட்டார்.

இதனை அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சங்கங்கள் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் போர்க்காலங்களில் இரவு நேரங்களில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வானொலி மூலம் மக்களுக்கு தெரிவித்தார். இந்த நிலையில் பிரதமர் கோரிக்கையை ஏற்று வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழக முழுவதும் உள்ள அனைத்து கடைகள், ஹோட்டல்கள் மூடப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

16 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

5 hours ago