தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் காய்கறி, மளிகை முதல் கடைகள் திறக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் குறையாத நிலையில் மே 24 முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் மே 31 ஆம் தேதியிலிருந்து ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உடனான ஆலோசனைக்கு பின் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளரை சந்தித்தார். அப்போது, வரும் 7 ஆம் தேதி காலை போது ஊரடங்கு முடிவுக்கு வருவதால் கொரோனா குறைவாக உள்ள மாவட்டங்களில் கடைகளை திறக்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தபோது காலை 6 மணி முதல் 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால்,இந்த முறை கடைகள் திறக்கப்பட்டால் காலை 6 மணி முதல் 10 மணி என்பதை மேலும் சில மணி நேரம் அதிகரிக்க வேண்டும் என்று தலைமைச் செயலரிடம் கோரிக்கையை வைத்ததாக அவர் தெரிவித்தார்.
7 ஆம் தேதி ஊரடங்கு முடிவதால் அடுத்த கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…