சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.!

Published by
மணிகண்டன்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி முத்து சரவணன் என்பவர் இன்று காலை தமிழக காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.

செங்குன்றம் அருகே பாரியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கிலும், நெல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு உட்பட 7 கொலை வழக்குகளில் காவல்துறையினாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறியப்பட்டவர் ரவுடி முத்து சரவணன்.

பாரியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய கற்றவாளியாக உள்ளவர் முத்து சரவணன். அவர் தலைமறைவாக இருந்தார். இவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அவர் இருக்கும் இடம் அறிந்து இன்று காலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சோழவரம் வண்டலூர் பூங்கா அருகே புதூர், மாரம்பேடு எனும் இடத்தில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.

இதில் போலீசார் சுற்றி வளைத்த உடன் அங்கிருந்து தப்பிக்க காவல்துறையினரை நோக்கி முத்து சரவணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தற்காப்புக்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முத்து சரவணன் உயிரிழந்தார். மேலும், அவரது கூட்டாளியான சதீஷ் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.

இதில் துப்பாக்கி குண்டு காயத்துடன் ரவுடி சதீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சதீஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உயிரிழந்த முத்து சரவணன், சதீஷின் உடல்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல்…பிரதமர் மோடி பீகார் பயணம்!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…

22 minutes ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

1 hour ago

மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமின்: சென்னை நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,…

1 hour ago

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

10 hours ago

“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…

11 hours ago

பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…

12 hours ago