சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்.! 20,000 விவசாயிகளுக்கு முன்னுரிமை- மின்சாரத்துறை அமைச்சர் பேச்சு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தமிழக சட்டப்பேரவை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய, அமைச்சர் தங்கமணி மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை குறித்து அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து கூட்டத்தொடரில் ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் கேள்விகள் எழுப்பி விவாதத்தை நடத்தினர். அப்போது மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, சோலார் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்று கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அதற்கான விலையையும் நிர்ணயம் செய்யப்பட்டு வருவதாகவும் முதற்கட்டமாக 20,000 விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் விவசாயிகள் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தை அரசு ஊக்குவிக்கும் என்றும் அமைச்சர் தங்கமணி பேரவையில் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

30 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

60 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago