தற்போது தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் டெங்கு பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை தமிழகம் அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
தேங்கிக்கிடக்கும் மழை நீரால் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவ வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சொமாட்டோ நிறுவனத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால் அந்த நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துணை ஆணையர் மதுசூதன் ரெட்டி கூறுகையில், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சமூக நிறுவனத்தில் அறுபத்தி பயன்படுத்தப்படாத டெலிவரி டைகர் மாடியில் வைக்கப்பட்டுள்ளன அதில் அதை பொய் ஆய்வு செய்தபோது உற்பத்தியாகும் கொசுக்கள் உருவாகும் சூழல் இருந்ததால் அந்த நிலத்தில் ஒரு லட்சம் அபராதம் விதித்து அதை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.
அத்துடன் மேலும் அவர்கள் சுத்தமாக வைத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.மக்களின் நலன் கருதி பல இடங்களில் சோதனை எடுத்து வருகிறோம். ஒரு இடத்தில் கொசு உற்பத்தி ஆகி விட்டால் அந்த இடத்திலிருந்து 300 மீட்டர் வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுவர்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…