குடும்பம் நடத்த வராததால் மனைவி , மாமியாரை கத்தியால் குத்திய மருமகன்

Published by
Dinasuvadu desk
  • கல்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வராசு, ஜெயந்தி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
  • இதையெடுத்து செல்வராசு ,ஜெயந்தியிடம்  தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு கூறியுள்ளார். ஜெயந்தி மறுப்பு தெரிவித்தால் செல்வராசு கத்தியால் குத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்  உள்ள ஆரணியை அடுத்த கல்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (கூலி தொழிலாளி). இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயந்தி பிரிந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதையெடுத்து தனது மாமியார் வீட்டுக்கு சென்ற செல்வராசு தனது மனைவி ஜெயந்தியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு கூறியுள்ளார்.

ஆனால் ஜெயந்தி மறுப்பு தெரிவித்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் கோபமடைந்த  செல்வராசு தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜெயந்தியை குத்தியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயந்தி தாய் விஜயா தடுக்க வந்து உள்ளார்.அவரையும் கத்தியால் செல்வராசு குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையெடுத்து காவல் நிலையத்தில்  செல்வராசு சரணடைந்தார்.அவரிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

9 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

10 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

11 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

11 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

11 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

12 hours ago