நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு காரைக்காலில் இருந்து புதுச்சேரி மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தெரிவித்துள்ளார்.
அதன்படி பேருந்து முன்பதிவுக்கு 04368-228801, 227704 என்ற தொலைபேசி எண்களை மாணவர்கள் தொடர்புகொள்ளலாம் தொடர்பு கொள்ளாலம் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, நீட் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு நேற்று ஹால் டிக்கெட் விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…