அதிமுகவின் 50ம் ஆண்டு பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுதல் என்ற சிறப்பு தீர்மானம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் 50 ம் ஆண்டு பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுதல் என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் பல உயரங்களைத் தொட வேண்டும் என்பதற்காகவும், தீய சக்தியிடமிருந்து இந்த நாட்டையும், மக்களையும் காட்டாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர். அவர்களால் 16 லட்சம் தொண்டர்களோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.
இதன்பின் அம்மா அவர்களின் அயராத உழைப்பால் ஒன்றரைக் கோடித் தொண்டர்களைக் கொண்ட மிகப் பெரிய இயக்கமாக, எஃகுக் கோட்டையாக தற்போது 50-வது ஆண்டு பொன்விழாவில் அடியெடுத்து வைக்கிறது.
அதிமுகவின் பொன்விழா ஆண்டை சீரோடும், சிறப்போடும், எழுச்சியோடும் தமிழகம் மட்டுமல்லாமல், கழகம் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும், பார் போற்றும் பெருவிழாவாக, மிக விமரிசையாக, மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை வழங்கிக் கொண்டாட இக்கூட்டம் தீர்மானிக்கிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…