9 மாதத்திற்கு பிறகு திருச்சி – ராமேஸ்வரம் இடையே மீண்டும் சிறப்பு ரயில் சேவை!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் திருச்சி ராமேஸ்வரம் இடையே நேற்று முதல் இயக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்பொழுது வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. பேருந்துகள் இயக்கம் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சில ரயில் சேவைகளுக்கும் படிப்படியாக கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது. தற்பொழுது 9 மாதத்திற்கு பிறகு திருச்சி ராமேஸ்வரம் இடையே நேற்று முதல் மீண்டும் சிறப்பு ரயில் சேவை தொடங்கியுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு 10 பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டது, இதனையடுத்து பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த ரயிலில் முன்பதிவு செய்து மட்டுமே பயணம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து தினமும் இரண்டு ரயில்கள் சென்னைக்கும், வாரத்தில் ஒருமுறை ஒடிசா மாநிலம் செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

11 minutes ago

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…

39 minutes ago

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

3 hours ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

3 hours ago