என்னை தான் மறைமுகமாக அவர் கூறினார்.! அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைச்சர் உதயநிதி கலகலப்பான பேச்சு.!

Published by
மணிகண்டன்

அண்ணா பல்கலைக்கழக விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். 

இன்று சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணி குறித்த விழா ஒன்று நடைபெற்றது. அதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் . அவர் பேசுகையில் தான் வகித்து வந்த சிண்டிகேட் பதவி குறித்தும் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு என்பது ஆட்சி மன்ற குழுவாகும். அண்ணா பல்கலைக்கழகம் குறித்த முக்கிய முடிவுகளை இந்த குழு எடுக்கும். இதில் எம்எல்ஏவாக இருந்த போது உதயநிதி ஸ்டாலின் பதவியில் இருந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இதில் இருந்து விலகிக்கொண்டார்.

முதலில் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் , சிண்டிகேட் ஆட்சி மன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறினார். அதன் பிறகு பேச வந்த அமைச்சர் உதயநிதி, துணைவேந்தர் வேல்ராஜ் கூறியது என்னைத்தான். நான் தான் சிண்டிகேட் உறுப்பினராக இருந்த போது கூட்டத்தில் கலந்து கொண்டது இல்லை. ஒரே ஒரு கூட்டத்தில் தான் கலந்து கொண்டேன் என கூறியதும், அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.

அதன் பிறகு, தான் விலகிவிட்டேன். தற்போது, எம்எல்ஏ பரந்தாமன் புதிய உறுப்பினராக சேர்ந்துள்ளார். அவர் கண்டிப்பாக சிண்டிகேட் ஆலோசனை கூட்டத்திற்கு வந்துவிடுவார் என கூறியதும், அரங்கும் மேலும் சிரிப்பலை மூண்டது. அடுத்ததாக தனது என்எஸஎஸ் மாணவர் படை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

3 minutes ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

44 minutes ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

1 hour ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

2 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

2 hours ago

சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : “இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்”..டிஜிபி அறிவிப்பு!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…

3 hours ago