சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வருகிறது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி…! எப்போது….?

Published by
லீனா

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வரும் ஜூன் இரண்டாம் வாரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில்  கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் தொற்று பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில்,  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வரும் ஜூன் இரண்டாம் வாரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, கடந்த 17-ஆம் தேதி ஹைதராபாத்தில் தடுப்பூசிகள் பரிசோதனைக்காக செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்போல்லோ நிர்வாக துணைத் தலைவர் ஷோபனா காமினேனி கூறுகையில், “நாட்டின் 80 இடங்களில் 10 லட்சம் தடுப்பூசிகள் போட்டு உள்ளோம். முன்னணி தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் இரண்டு கோடி தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் உள்ளோம் என்று  தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

29 minutes ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

2 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

2 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

2 hours ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

3 hours ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

4 hours ago