1,100 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் ஸ்விகி ஆன்லைன் நிறுவனம்!

Published by
லீனா

1,100 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் ஸ்விகி ஆன்லைன் நிறுவனம்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால், ஊரடங்கு உத்தரவு பிராபிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டது. இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  வெளியிடப்பட்ட தளர்வுகளை தாண்டியும் தொழிற்துறை இயல்புநிலைக்குத் திரும்பவில்லை.

தொழில் நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருவதையடுத்து, பல தொழில் நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 

ஸ்விகி நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், ‘ஸ்விகி நிறுவனத்துக்கு இது மிகவும் சோகமான தினங்களில் ஒன்று எனவும், எதிர்பாரதவிதமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படும் என்றும், ஸ்விகி நிறுவனத்தில் பணியாற்றிய வருடங்களின் அடிப்படையில் ஒரு வருடத்துக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்றும், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கான டிசம்பர் 31-ம் தேதி வரை மருத்துவ காப்பீடு இந்த ஆண்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோல சொமேட்டோ நிறுவனமும் 13 % பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Published by
லீனா

Recent Posts

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

8 minutes ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

14 minutes ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

1 hour ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

2 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

2 hours ago