மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், மீனவர் ஒருவரின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 28ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இவர்களின் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில படகில் இருந்த நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர் கலைச்செல்வன் என்பவரின் தலையில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திங்கட்கிழமை காலை நாகை மீனவர்கள் கரை திரும்பிய பின், உடனடியாக கலைச்செல்வன் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…