இலங்கை அகதிகள் இந்தியாலிருந்து இலங்கைக்கு அனுப்பபடுவர்.. இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் கருத்து..

Published by
Kaliraj
  • இலங்கை அகதிகள் பாதுகாப்பாக தங்கள் தாய்நாடு திரும்ப நடவடிக்கை.
  • இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அறிவிப்பு.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தணா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து இருதரப்பு குறித்து பேச்சு நடத்தினர்.  இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.இதில்,  தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள 3000 இலங்கை அகதிகளை அவர்களின் தாய்நாடான இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,அவர்களின் தாய்நாடான  இலங்கை செல்ல விரும்பிய 3000 அகதிகளை  அடையாளம் கண்டுள்ளதாகவும் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Image result for இலங்கை அகதிகள்

மேலும் கூறிய அவர், இன்னமும்  சில மாதங்களில் அவர்கள் சொந்த ஊரான இலங்கைக்கு  திரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  தற்போது இந்தியாவில் கொண்டுவரப்பட்ட  குடியுரிமை சட்ட திருத்தத்தில் இலங்கை தமிழர்கள் இடம்பெறாததையடுத்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டிருந்த  நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தணா  இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த தகவலால் இலங்கை குடிமக்கள் தங்கள் தாய்நாடு செல்ல இருப்பது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

1 minute ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

38 minutes ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

41 minutes ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

1 hour ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago