தமிழகத்தில் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல்.
பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் சேலம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் ரூ.110 கோடிக்கு முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் பிரதமர் மந்திரி கிசான் திட்டத்தில் ரூ.110 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. 6 லட்சம் போலி பயனாளிகள் சேருவதற்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிசான் நிதியுதவி திட்ட முறைகேட்டில் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வலியுறுத்தி உள்ளார்.
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…