மத்திய அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த சட்டத்தை எதிர்த்து பல அரசியல் காட்சிகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பலதரப்பு மக்கள் அவர்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஆங்காகே போராட்டங்கள் கலவர களமாக மாறியது. இதிலும் அந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள். இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் மீது தமிழகத்தில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவதாகவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து 2020-21க்கான மத்திய பட்ஜெட் என்பது இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்குமான பட்ஜெட் எனவும், இதில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…