கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது.இந்த விவகாரத்தில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றது.ஆனால் பாஜக மட்டும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த விவகாரம் ஒரு புறம் இருக்க மறுபுறம் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள களியப்பேட்டை என்ற கிராமத்தில் இன்று அதிகாலை பெரியார் சிலையில் மூக்கு, கை பகுதியில் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்ட அறிவிப்பில், தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…