தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயகாந்த்

Published by
லீனா

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும் அதிமுகவும் மேகதாது விவகாரத்தில் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை என விஜயகாந்த் அறிக்கை. 

மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்பட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 39 MPகள் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி,தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அந்த கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் மத்திய நீர் வழித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20ம் தேதி எழுதிய கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கர்நாடகாவின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும் அதிமுகவும் மேகதாது விவகாரத்தில் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை.

மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என்று கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியிடம் திமுக வலியுறுத்த வேண்டும். பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களை, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்வது இது ஒன்றும் புதிதல்ல. அவர் டெல்லி சென்று வருவதால் மட்டும் எந்த பயனும் இல்லை. மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 39 எம்பிக்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களையும் நேரில் சந்தித்து, இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்…செம டென்ஷனான கிறிஸ் கெயில்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

5 hours ago

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…

6 hours ago

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…

6 hours ago

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

7 hours ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

8 hours ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

9 hours ago