ஸ்டெர்லைட் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
சுற்றுசூழலுக்கு கேடு விளைவிப்பதாக கூறி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசானது சீல் வைத்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உயர் நீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது. அனைத்து சட்ட நெறிகளுக்கு உட்பட்டு ஆலை செயல்பட்டு வந்ததாகவும், எந்தவித முன்னறிவிப்புமின்றி தமிழக அரசு சீல் வைத்ததாகவும், வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டால், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…