பேடிஎம் சேமிப்பு கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம்.
இன்று அதிகமானோர் பணம் பரிமாற்றம் செய்வதற்காக பேடிஎம் செயலியை உபயோகித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை, பார்க்டவுன் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர் இந்த செயலியை உபயோகித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி, இவரது பேடிஎம் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த ரூ.47, 705 பணத்தை திருடி விட்டதாக, இவரது போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து, ரவிக்குமார், சென்னை பூக்கடை போலீசாருடன் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,அவர் மீண்டும், பூக்கடை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் ரவிகுமாரிடம் விசாரணை மேற்கொண்டதில், இவர் எந்த பணபரிமாற்றமும் செய்யவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பேடிஎம் நிறுவனத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…