bar - chennai high court [file image]
அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் இயங்கும் டாஸ்மாக் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்கள் செயல்படுவதாக, சுரேஷ்பாபு என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சுரேஷ்பாபு தொடர்ந்த வழக்கில், தனியார் ஹோட்டல்கள், கிளப்புகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றை தடுக்க தமிழக அரசுக்கு புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செயப்பட்டது.
அதில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல்நேரம் இயங்கும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கலால்துறை, காவல்துறை, வருவாய்துறையினர் அடங்கிய குழு அமைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர்கள் அமைக்கும் குழுக்கள் சோதனைகளை மூலம் திடீர் நடத்தவேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் இயங்கும் டாஸ்மாக் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…