அதிகாரத்தை தடுக்க கடும் விதிகள் தேவை – தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Published by
பாலா கலியமூர்த்தி

கடும் விதிமுறைகளை வகுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தலின்போது அரசியலமைப்பு பதிவிலுள்ள அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவை பரிசீலினை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், அவர்களையும் கண்காணிப்பதற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிமதி அமர்வு, தேர்தலின்போது அரசியலமைப்பு பதிவிலுள்ள அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க கடும் விதிமுறைகளை வகுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…

27 minutes ago

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ வெளியிடலாம்..,’மிரட்டல்களை அனுமதிக்க முடியாது’ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…

48 minutes ago

திமுக காரணமா? அன்புமணி சொன்னது அப்பட்டமான பொய்” – ராமதாஸ் விளக்கம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!

லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…

3 hours ago

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

3 hours ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

4 hours ago