பொறியியல் படிப்புக்கான சேர்க்கை ஆன்லைன் வழியே பதிவு செய்ய வருகின்ற ஜூன் 10-ம் தேதியில் இருந்து தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால், நடைபெறாமல் இருந்த 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
மேலும், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். தற்போது, கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கல்லூரிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் 1,72,148 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக நேற்று கே.பி. அன்பழகன் கூறினார்.
இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான சேர்க்கை ஆன்லைன் வழியே பதிவு செய்ய வருகின்ற ஜூன் 10-ம் தேதியில் இருந்து தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…