பயணிகள் பாதுகாப்பில் அரசு அலட்சியம்… சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு.!

Published by
Muthu Kumar

ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் ஒன்றிய அரசு பயணிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியுள்ளதாக எம்.பி சு.வெங்கடேசன் விமர்சனம்.

ஒடிசாவில் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். எலக்ட்ரானிக் இன்டர்லாக் எனும் சிக்னல் மாற்றத்தினால் இந்த கோர விபத்து நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஒன்றிய அரசு பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியதாவது, பயணிகள் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி விளம்பரம் செய்வதை மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தியது தான் இந்த மாபெரும் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் 13200 ரயில் இன்ஜின்களில் வெறும் 65 இன்ஜின்களில் மட்டுமே கவச்(ரயில் பாதுகாப்புக்காக பொருத்தப்படும் சாதனம்) எந்திரம் பொறுத்தப்பட்டதாக கடந்த ஆண்டு ரயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 2022 மார்ச்சுக்கு பின் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் வெங்கடேசன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!

சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…

18 minutes ago

வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?

சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…

37 minutes ago

மாணவர்களே 10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு…எப்படி பார்க்கலாம்?

சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச்  28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…

1 hour ago

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

16 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

17 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

17 hours ago