சமையல் குறிப்பு புத்தகங்களை கூட விற்க முடியாது! – மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆவேசம்!

Published by
மணிகண்டன்
  • சென்னையில் அண்மையில் புத்தக கண்காட்சி விழா நடைபெற்றது. அதில் அரசுக்கு எதிராக புத்தகம் விற்றதாக பத்திரிக்கையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.
  • இது குறித்து தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்துக்களை தெரிவித்து விழாவில் பாதியில் வெளியேறினார்.

அண்மையில் சென்னை நந்தனத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டிருந்தது. அதில், அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனை செய்ததாக கூறி , பத்திரிக்கையாளர் அன்பழகன் வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ‘கீழடி ஈரடி’ எனும் தலைப்பில் உரையாற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான எழுத்தாளர் சு.வெங்கடேசன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடையில் பேசுகையில், நான் கீழடி ஈரடி பற்றி பேசப்போவதில்லை என கூறினார். மேலும், பபாசியின் நடவடிக்கை கருத்துரிமைக்கு எதிரானது. கருத்து சுதந்திரத்தை காவு கொடுக்கக்கூடாது.

அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாது என்றால், சமையல் குறிப்பு புத்தகம் கூட விற்கக்கூடாது. ஏனென்றால், அதில் வெங்காயம் பற்றி இருக்கிறது. அதே போல உப்பு பற்றியும் இருக்கிறது. அது மாநில அரசுக்கு எதிரானது. என கருத்து  தெரிவித்தார். அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாது என்றால், காந்தி, அண்ணா, அம்பேத்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்களை கூட விற்கக்கூடாது. என தனது அதிருப்தியை தொடர்ந்து வெளியிட்டு, விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

6 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago