சமையல் குறிப்பு புத்தகங்களை கூட விற்க முடியாது! – மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆவேசம்!

Published by
மணிகண்டன்
  • சென்னையில் அண்மையில் புத்தக கண்காட்சி விழா நடைபெற்றது. அதில் அரசுக்கு எதிராக புத்தகம் விற்றதாக பத்திரிக்கையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.
  • இது குறித்து தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்துக்களை தெரிவித்து விழாவில் பாதியில் வெளியேறினார்.

அண்மையில் சென்னை நந்தனத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டிருந்தது. அதில், அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனை செய்ததாக கூறி , பத்திரிக்கையாளர் அன்பழகன் வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ‘கீழடி ஈரடி’ எனும் தலைப்பில் உரையாற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான எழுத்தாளர் சு.வெங்கடேசன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடையில் பேசுகையில், நான் கீழடி ஈரடி பற்றி பேசப்போவதில்லை என கூறினார். மேலும், பபாசியின் நடவடிக்கை கருத்துரிமைக்கு எதிரானது. கருத்து சுதந்திரத்தை காவு கொடுக்கக்கூடாது.

அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாது என்றால், சமையல் குறிப்பு புத்தகம் கூட விற்கக்கூடாது. ஏனென்றால், அதில் வெங்காயம் பற்றி இருக்கிறது. அதே போல உப்பு பற்றியும் இருக்கிறது. அது மாநில அரசுக்கு எதிரானது. என கருத்து  தெரிவித்தார். அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாது என்றால், காந்தி, அண்ணா, அம்பேத்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்களை கூட விற்கக்கூடாது. என தனது அதிருப்தியை தொடர்ந்து வெளியிட்டு, விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

38 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

19 hours ago