Breaking:கைதி சுட்டுக் கொலை.!சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு.!

Published by
Dinasuvadu desk
  • ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் விசாரணைக் கைதியை சுட்டுக் கொன்ற வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸுக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வழங்கியது.
  • இந்த வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் என  மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் விசாரணைக் கைதியை காவல் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸுக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

கடந்த 2014-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்தவர் காளிதாஸ். இவர் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த செய்யது முகம்மது (24). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் மீது திருட்டு புகார் வந்தது. இதையெடுத்து அவரை விசாரிக்க  செய்யது முகம்மதுவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.

அவரிடம்  காளிதாஸ் விசாரணை நடத்தியபோது கத்தியால் கொலை செய்யும் நோக்கத்தில் செய்யது முகம்மது தாக்க வந்ததாகவும் அதனால் தன்னை தற்காத்து கொள்வதற்காக  துப்பாக்கியால் அவரை சுட்டதாகவும் கூறப்பட்டது. மார்பில் குண்டு பாய்ந்த செய்யது முகம்மது சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்போது இறந்தார்.

இது குறித்து எஸ்.பி.பட்டினம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கொலை வழக்குபதிவு செய்து விசாரிக்க வேண்டும் என செய்யது முகம்மது தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த வழக்கை ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து  காளிதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர்  ஜாமீனில் வெளியே வந்த காளிதாஸ் பணியிடை நீக்கத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் மீண்டும் பணியில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு ஆவணக்காப்பகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம்  ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தது. அந்த அபராதத் தொகையை செய்யது முகம்மதுவின் தாயாரிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையெடுத்து காளிதாஸ் இந்த வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸுக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Published by
Dinasuvadu desk
Tags: HCBench

Recent Posts

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

2 minutes ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

50 minutes ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

1 hour ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

1 hour ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

3 hours ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

4 hours ago