இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா.?உண்மையான காதலை வெளிப்படுத்திய இளைஞன்!

Published by
Sulai
  • தனது காதலனுடன் தனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியதை நம்பி மகிழ்ச்சியுடன் கிளம்பி வந்த இளம்பெண்.காதல்நின் தந்தை செய்த கொடுமை.
  • ஊர் மக்கள் அனைவரையும் வியப்படைய செய்த காதலன்.

நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம் ஆவார்.அமமுக நிர்வாகியாக உள்ள இவர் ஜவுளி கடை வைத்துள்ளார்.இவரது மகன் முகேஷ் கண்ணன் ஆவார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.தற்போது இருவரும் சென்னையில் வேலைபார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த காதல் விவகாரம் முகேஷு கண்ணனின் தந்தை நித்யானந்தத்திற்கு தெரியவந்துள்ளது.அந்த பெண்ணிடம் செல்போனின் பேசிய அவர் உன்னை என் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அது குறித்து உன்னிடம் பேச வேண்டும் என் வீட்டிற்கு தனியாக வா என்று அழைத்துள்ளார்.இந்நிலையில் கடந்த 28-ம் தேதி அந்த பெண் சென்னையில் இருந்து கிளம்பி நித்யானந்தத்தின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்ட நித்தியானந்தம்,வீட்டில் இருந்த தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் பலவந்தமான முறையில் கட்டியுள்ளார்.இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அவரை மிரட்டிய நித்தியானந்தம் 2 நாட்கள் வீட்டிலேயே அடைத்து வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.பின்பு அவுரிக்காட்டை சேர்ந்த தனது நண்பன் சக்திவேல் வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று அடைத்து வைத்துள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் முகேஷ் கண்ணனுக்கு தெரிய வர அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவுரிக்காடு சென்று காதலியை மீட்ட அவர் ,தனது தந்தை கட்டிய தாலியை அறுத்து எறிந்துள்ளார்.இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த மகளீர் காவல்துறையினர் நித்தியானந்தம் ,அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் சக்திவேல் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண்ணை முகே‌‌ஷ்கண்ணன் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததால் தனது தந்தையால் அந்த பெண்பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அவரை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

இருப்பினும் அந்த பெண் மீது கொண்ட உண்மையான காதலினால் அந்த பெண்ணை கைவிடவில்லை.அவரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.அதன்படி நேற்று முன்தினம் இரவு ஒரு கோவிலில் ஊர்மக்கள் முன்னிலையில் அந்த பெண்ணை முகேஷ் கண்ணன் திருமணம் செய்துள்ளார்.

பின்னர் புதுமண தம்பதிக்கு ஊர் மக்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

7 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

19 minutes ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

31 minutes ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

12 hours ago